Headlines

ரவிகருணாநாயக்கவின் இப்தார் நிகழ்வு (Photo)

– அஷ்ரப் ஏ சமத் – நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு  நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர்  இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.

Read More

1500 அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளது-நிதி அமைச்சர்

கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடன்இ டம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

Read More

ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிஷாத்!

– சுஐப் எம்.காசிம்  – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து, அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடக்குவதே எதிர்த்தரப்பினரின் நோக்கம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் பங்கேற்று, உரையாற்றிய…

Read More

இலங்கை குறித்து உலக வங்கி மகிழ்ச்சி!

இலங்கையில் நடைபெற்ற அதிகார மாற்றத்தின் பின்னர் நல்லதோர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து ஆராய்வதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இந்த குழுவினர் இலங்கையில் இருந்து திரும்பும் முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து புதிய அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார வளர்சிக்கான சாத்தியங்கள் குறித்து தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதேவேளை, இலங்கையின்…

Read More

கடன்தொகையை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கான கடன்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் ஜேர்மனில் நடைபெற்ற 49ஆவது நிதி அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு இன்யைதினம் (7) நாடுதிரும்பிய நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க குறித்த மாநாடு தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

நாமலின் விதி சில தினங்களில் தெரியும் – ரவி கருணாநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்

பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…

Read More

உலக வங்கியின் மாநாட்டில் நிதியமைச்சர்!

– பா.ருத்ரகுமார் – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க நாளை ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. ஐக்கிய அமரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு இம்மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறும். இம்மாநாட்டுக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 187 நாடுகளின் நிதியமைச்சர்களும் நிதித்துறை தலைவர்களும் பங்குபற்றுகின்றனர்.

Read More

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது.. இலங்கை அரசின் உதவியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பென்க் சுசன்டோனோ ஆரம்ப உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் ஆலோசனையின் பேரில் 2010ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி மாநாடானது ஆரம்பமாகியது. கடந்த மாநாடனது கொரியா, ஜப்பான், தாய்லாந்து…

Read More

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…

Read More