Headlines

அமைச்சர் ரவி வாஷிங்டன் பயணம்

பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும்மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கிறது இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன் நிமித்தம், வாசிங்டனுக்கு இந்தவாரத்தில் செல்லவுள்ளார். அவருடன், நிதியமைச்சின் செயலாளர்; ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின்ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களி;ன் மாநாடுநடைபெறவுள்ளது. இதனையடுத்து 7 முதல் 9ம் திகதிவரை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைஅமர்வு…

Read More

புதிய வற் சட்டமூலம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பு

வற் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது தடவை இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை, அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக்காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. இதில், முன்னைய சட்டமூலத்தை காட்டிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read More

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் இணக்கம்

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு,…

Read More

இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிக்க புதிய நடவடிக்கை!

இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 26ஆம் தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியில் நேற்று பங்கேற்ற போது ஊடகவியலாளாகளிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலை சர்வதேச அளவில் விரிவு படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

நிதி அமைச்சர் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள எட்டாவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  நிதி அமைச்சர் ரவி   கருணாநாயக்க இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய விடயங்களும், பொருளாதார  பிராந்திய முதலீடுகள் பற்றிய விடயங்களும் முதன்மை பெறுகின்றன. பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் இந்த மாநாட்டில் அமைச்சரின் செயலாளர் டாக்டர் சமரதுங்கவும் வேறுசில அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளார்கள்.

Read More

2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டம்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

கடைகளை மூடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது!

கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார். அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்குள்ள விவாசாயிகளை…

Read More

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் சாதனை

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நடவடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசணையின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விஷேட முற்றுகை பிரிவை ஸ்தாபித்தார்.

Read More

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்

-சுஐப் எம்.காசிம் – அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார். அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட…

Read More

தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…

Read More

அரச காணிகள் பற்றிய தகவல்களை திரட்ட பணிப்புரை

வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர…

Read More

ரூ.33 ஆயிரத்துக்கு குறைவு என்றால் பிரச்சினையில்லை

தினசரி பணப்புரள்வு 33 ஆயிரத்துக்கு குறைவாக அல்லது மாதாந்த பணப்புரள்வு 1 மில்லியனுக்கு குறைவான வியாபாரிகள், வெட் தொடர்பில் பதிவுசெய்ய அவசியம் இல்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More