Headlines

வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்

உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணைய மயப்படுத்தும் பணிகளை, சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமைக்குள் இந்த பெயர்கள் இணைய பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இடையில் இதற்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

Read More

புதிய பட்டியலுக்கு சுகாதார அமைச்சர் அனுமதி

புதிதாக வழங்கப்படும் வைத்தியர் பதவி நியமன பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய பட்டியலை நாளை health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம். இன்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தலைமையில் குறித்த நியமனப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமச்சருக்கும் சங்கத்திற்கும் அவசர சந்திப்பு

– பா.ருத்ரகுமார் – வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் நோக்கில் சுகாதார அமைச்சர் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்று  (2) இரவு 9.30 இற்கு அவசர பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பிலான  பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வைத்திய சேவை இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (31)    …

Read More

மஹிந்தவிற்கே அஞ்சாத நாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை – ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே அஞ்சாத தாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 15 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக கடயைமாற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நியமனங்களில்  தலையீடு செய்ததில்லை எனவும், பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு; உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ சங்கம்…

Read More

ராஜித குழுவினர் ஜெனீவா நோக்கிப் பயணம்

69ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளிட்ட குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இந்த சுகாதார மாநாடு இன்று 23ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

அரசாங்கத்தை கவிழ்க முடியாது – ராஜித

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு முயற்சியும்வெற்றியளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தினை கவிழ்ப்பதே சிலரின் நோக்கமாகவும் உள்ளது. ஆனால், அரசாங்கத்தினை கவிழ்ப்பதானது அனைவரினதும் கனவு மாத்திரமே என அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.

Read More

எதிர்க்கட்சித் தலைவர் தமிழன் என்பதால் முகாம்களுக்குள் செல்லத் தடையா?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்பதால் தான் இராணுவ முகாம்களுக்குள் செல்லத் தடையா? அவ்வாறு தடை விதித்தது யார்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மற்றைய நாட்களில் நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார். கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை…

Read More

இலங்கையில் மலேரியா தொற்று இல்லை – அமைச்சர் ராஜித

சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று உத்தியோகவபூர்வமாகத் தெரிவித்தார். அமைச்சு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பயனாக 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டினுள் எவரும் மலேரியா நோய்க்கு உள்ளாகவில்லை என்று- சுட்டிக்காட்டிய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, எம்மைச் சூழவுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி நாடு திரும்புபவர்கள்…

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

ராஜித்த சேனாரத்ன, நாடு திரும்பியுள்ளார்

சுகயீனம் காணரமாக சிங்கப்பூரிற்கு மேலதிக சிகிச்சைக்காக சென்றிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 9.30 அளவில் அமைச்சர் நாட்டை வந்தடைந்துள்ளார். மேலும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகயீனமுற்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்புகிறார் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (16)  நாடு திரும்புகிறார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக சென்றிருந்த ராஜித சேனாரத்ன சிகிச்சை வெற்றியளித்த நிலையில் இன்று நாடு திரும்பவுள்ளதாக அமைச்சரவை தரப்புக்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 19ஆம் திகதி திடீரென்று மாரடைப்புக்குள்ளான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விஷேட விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் நாடு திரும்பிய உடன் அரசியல் நடவடிக்கைகளிலும், தமது அமைச்சு வேலைத்திட்டங்களிலும்…

Read More

மருந்து முன்னேற்றம் குறித்து ஆராய குழு நியமிப்பு

நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில்…

Read More