Headlines

துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும் – JVP

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.  அவர்…

Read More

போர்ட் சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரம்!

கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு…

Read More

துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் முறைப்பாடு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் சார்பாக நாளை தினம் இந்த முறைப்பாடானது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வேக்கந்தவெல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளுக்கு இத்துறைமுக திட்டமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More