கரைகிறது வாழ்க்கை (Poem)
– நிஷவ்ஸ் – கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம் புரண்டு முரண்டு உருண்டு தவழ்ந்து தாய்ப்பால் முடியும் வாய்ப்போடு முடியும் மழலையாய் வாழ்ந்த குழந்தைப் பருவம். செல்லப் பிள்ளையாய் தொல்லைகள் கொடுத்து கள்ளமாய் சீனியை அள்ளித் தின்று துள்ளித் திரியும் பிள்ளைப் பருவம் ஐந்து வயதோடு அடங்கத் தொடங்கும். வேலிக்கு வெளியேயும் வேறுலகம் உள்ளதனை காலம் காண்பிக்கும் கால்களில் துடிப்பெடுக்கும் ஏலான்னு…
