Headlines

பாரிசில் ஒபாமா – புதின் சந்திப்பு

பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். கடந்த வாரம் சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய பிறகு ஒபாமாவும் புதினும் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது புதினிடம் கொல்லப்பட்ட ரஷ்ய விமானிக்காக தனது இரங்கலை ஒபாமா தெரிவித்தார். துருக்கி ரஷ்யா…

Read More

அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்படி பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, நாட்டில் மதத்தின் பெயரால் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவுள்ளதாகவும், ஒரு இந்திய குடிமகனாக என்னால் அதனை மறுக்க முடியாது…

Read More

அப்பாவிகளை கொல்பவன் முஸ்லிமே அல்ல: அமிர் கான் கடும் கண்டனம்

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை…

Read More

பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ்?

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் கள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் கள் இதனை பயன்படுத்தி நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நீர்நிலைகளில் மக்களை கொல்லும் இரசாயனங்களை கலக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு…

Read More

அரபி பேசியதால் விமானத்தை விட்டு தடுக்கப்பட்ட முஸ்லிம்கள்!

இரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும். 29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில்…

Read More

பிரான்ஸிற்கு இரசாயன ஆயுத தாக்குதல் அபாயம்!

பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்சில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, பயணிகள் குறித்த புள்ளி விபரங்களை அளிக்குமாறு ஐரோப்பாவிடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ். களின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் முன்எப்போதும் இல்லாத…

Read More

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் நாய்

பிரான்ஸ் தலைநகரம் பாரிசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ் கள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நானூறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடந்த போராட்டத்தின்போது, டீசல் என்ற ஏழு வயது போலீஸ் நாய் உயிரிழந்தது. டீசல் என்ற இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய் உயிரிழந்த செய்தியை பிரென்சு போலீசார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்ட…

Read More

நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா? (வீடியோ)

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர் ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான்…

Read More

முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்

பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்­ளி­வாசல் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்­லிம்கள் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் அல்ல என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்டும் பொருட்டு பாரிஸில் வசிக்கும் சகல முஸ்­லிம்­க­ளையும் ஒன்­று­தி­ர­ளு­மாறு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More

பாரீஸில் மீண்டுமொரு தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி (Breaking news)

பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று…

Read More

வெக்கம் கேட்ட உலக நாடுகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர்   கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்  கொல்லப்பட்டவர்களில்  8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது. இத்தாக்குதலுக்கான முழுப் பொருப்பையும்  சர்வதேச தீவிரவாத இயக்கமான  ஐ.எஸ். ஐ.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது உண்மையில் இத்தாக்குதலானது ஜனநாயக நாடான பிரான்ஸின் அமைதி நிலையை சீர்  குழப்பவே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக அறிய முடிகின்றது. உலகத்தையே உல்லங்கையில்…

Read More

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தா?

பாரீஸ் நகரில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை விட  ஜனாதிபதி மீது அளவுகடந்த கோபமே மேலோங்கி இருப்பதாக சுவிஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுவிஸில் வெளியாகும் SonntagsZeitung என்ற பத்திரிகை பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவின்…

Read More