Headlines

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்டவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு…

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More

பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார். மேலும், 5 சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்; மறைந்திருந்த ஒருவரை திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச்சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த…

Read More

ஏறாவூர் இரட்டைக் கொலை: நெருங்கிய உறவினர் கைது

மட்டு – ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது பலகை ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது…

Read More

கொலையாளிகளை கண்டு பிடிக்க நீங்களும் உதவலாம்!

கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று பொலிஸாரை குறை கூறி கொண்டிருக்காமல் தங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் அச்சமின்றி முன்வந்து பொலிஸாருக்கு வழங்குவதன் மூலம் விரைவாக குற்றவாளிகளை நீதி விசாரணையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும் என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் கடந்த ஞாயிற்று கிழமை படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளினது சடலங்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டதன்…

Read More

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சுலைமான் கொலை – மேலும் ஐவர் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும் ஐவர் கைது…

Read More

கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?

பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் (25) பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும்,…

Read More

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.

Read More

கப்பம் கோரியே வானுடன் எரிப்பு!

தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு…

Read More