Headlines

ஜனாதிபதி யாழ் விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி, பொன்செல்வமஹால் அரங்கில் இந்த நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இலங்கை விவசாயிகளுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என…

Read More

இலங்கை – சீனா உறவு பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தி, முதலீட்டுத்துறை மற்றும் சர்வதேச மட்டத்திலும் சீனாமற்றும் இலங்கையின் உறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். சீன அரசானது இலங்கையுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வரும் அரசு என்றும்ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கல்வித்துறை, வீதி…

Read More

சர்வதேச தகவல் அறியும் உரிமை தொடர்பான மாநாடு நாளை கொழும்பில்

சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் ஊட­கத்­துறை அமைச்­சுடன் இணைந்து அர­சாங்க தகவல் திணைக்­களம் ஏற்­பாடு செய்­துள்ள சர்­வ­தேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கின்­றது. இந்த மாநாட்டில் இந்­தி­யாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­பதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொள்ள உள்ளார் . மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்­பட்ட நாடு­க­ளி­லி­ருந்து பிர­தி­நி­திகள் கலந்­து­ கொள்­ள­வுள்­ளனர் என்று…

Read More

நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…

Read More

மைத்திரி இன்று, நாடு திரும்புகிறார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 18ம் திகதி அமெரிக்க புறப்பட்டுச் சென்றிருந்தார். ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கயிருந்த காலத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை…

Read More

‘இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாது’

“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக்…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி    

ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய…

Read More

அரபு நாடு­க­ளுக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ளார். அவர் ஐக்­கிய அரபு இராச்­சியம், கட்டார், சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பய­ணிக்­க­வுள்ளார். சவூதி அரே­பியா விஜ­யத்­தின்­போது சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் மேல­திக கோட்டா தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இதனை  முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.  ஹலீ­ம் தெரிவித்துள்ளார்.

Read More

அரச பணத்தை விரயமாக்காதீர்கள் – ஜனாதிபதி

அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும்…

Read More

இலங்கையின் நிதித்துறையை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் மேலும் உதவி

சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மூன்று வருட திட்டத்தின் செயற்பாடுகள்தொடர்பில் நிதியத்தின் உயர் மட்ட பிரநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் நாட்டிள் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் ஓத்துழைப்பு வழங்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின்பிரநிதிகள் உறுதி தெரிவித்துள்ளனர். 150 கோடி அமெரிக்க டொலர்கள செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது நிதியத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள்…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நாடு வளம் பெறுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கானவேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார சுற்றாடல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட இலங்கையினால் பொருளாதார இலக்குகள் பலவற்றை பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வெனிசுவெலாவில் 18 ஆம் திகதி நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தவிடயங்;களை குறிப்பிட்டார். இறைமைஒற்றுமை சமாதானம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில்அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில்…

Read More

இலங்கையில் அடுத்த – நீல பச்சை சகாப்த மாநாடு கொழும்பில் நடைபெற ஏற்பாடு

கடல்வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்து 2018ஆம் ஆண்டளவில் பாரிய அளவிலான கடல் தொழில் தகவல்கட்டமைப்பு தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த  – நீல பச்சை சகாப்த மாநாடு ( ‘ Sri Lanka NEXT – Blue Green Era conference’)  என்ற தலைப்பில்மாகாநாடொன்றை நடத்துவதற்கானஎ ஏற்பாடுகளையும் இலங்கை  மேற்கொணடுவருவதாகவும் அமைச்சர் கூறினார். எங்கள் சமுத்திர மாநாடு 2016 என்ற மாநாட்டில் உலையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள…

Read More