Headlines

மஹிந்த தலைமையில் இன்று போராட்டம் வெடிக்கும்

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்­கு­பற்­ற­லுடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடம்­பெறும். எமக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். எனவே, அச்­ச­மின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் இன்­றைய எதிர்ப்புப் பேர­ணியில் கலந்­து­கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை துண்­டாட வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. ஏனெனில், உண்­மை­யான சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் கூட்டு எதிர்…

Read More

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் எம்.பி. பதவி பறிபோகும்

ஊழல் மோசடிகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர்களை விசாரிப்பதை தொடர்வதா? கைவிடுவதா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே     அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,   நாட்டை விடுதலை புலிகளுக்கு காட்டிக் கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தி ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்காகவே 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை சூழ்ச்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்….

Read More

யோஷிதவுக்கு பிணை

– அலுவலக செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு  பிணை வழங்கப் பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த நால்வருக்கும் பிணை வழங்கியுள்ளது.

Read More

மஹிந்த நல்லவர்: ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார். இந்த அரசாங்கம் பல…

Read More

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த…

Read More

அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

Read More

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில்  பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் காணியில் கடும் தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமான காணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் உள்ள காணியொன்றே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. STF பலத்த பாதுகாப்பில் பெகோ இயந்திரம் கொண்டு குறித்த இடமானது தோண்டப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுடனேயே இத்தேடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More