Headlines

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்” – ரஞ்சித் அலு­வி­கார

-ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை  பள்­ளி­வா­ச­லுக்கு  மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை  மாவட்ட பாராளு­மன்ற  உறுப்­பினர்  ரஞ்சித்  அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  முறை­யிட்­டுள்ளார். தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  பல­வ­ரு­டங்கள்  கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல்…

Read More

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

மதுபானசாலைக்கு எதிரே, பள்ளிவாசலுக்கு காணி வேண்டாம் – முஸ்லிம் அமைச்சர்களுக்கு கடிதம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென்று நகர அபி­வி­ருத்தி சபை ஒதுக்­கி­யுள்ள காணியை தவிர்த்து அதற்­கப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு சுவீ­க­ரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தரு­மாறு தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மி­டமும் அரச தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷி­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ள பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள காணி­யி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மது­பா­ன­சா­லைக்கு…

Read More

பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது

கடந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி  யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் தொடர்பில் அஸாத் சாலி

-எம்.ஆர்.எம்.வஸீம் – பொர­லஸ்­க­முவ  ஜும் ஆப் பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் சம்­பவம் தொடர்பில் பொர­லஸ்­க­முவ பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளோம். அத்­துடன் பொலிஸ்மா அதி­ப­ருடன் தொடர்­பு­கொண்டு சம்­பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று முன்­தினம் (6) மாலை சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் இடம்­பெற்ற செய்­தியை கேள்­வி­யுற்று அங்கு சென்­றி­ருந்த…

Read More

பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்கள்

அக்குறணை பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்களை இனந்தெரியாதோர் வீசிச்சென்றுள்ளதாக அளவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் சத்தம்கேட்டு அயலிலுள்ள ஒருவர் வந்து பார்த்த போது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவரின் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவும் வெளியே வந்தவரை வாளைக்காட்டி மிரட்டியதாகவும் குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நள்ளிரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சற்று விழிப்பாக இருந்த நிலையில், மீண்டும்…

Read More

முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்

பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்­ளி­வாசல் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்­லிம்கள் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் அல்ல என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்டும் பொருட்டு பாரிஸில் வசிக்கும் சகல முஸ்­லிம்­க­ளையும் ஒன்­று­தி­ர­ளு­மாறு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More

கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு

கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

Read More