Headlines

பொது மக்களுக்கான நடமாடும் சேவை!

167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை இன்று 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந் நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ்…

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More

கடைகளில் கொள்ளை

– ஜவ்பர்கான் – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் இன்று (26) அதிகாலை இரண்டு பலசரக்கு விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையமும் காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதியிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார்…

Read More

சோபித தேரருக்கு காத்தான்குடியில் முஸ்லிம்களால் அஞ்சலி

– ஜவ்பர்கான் – மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மக்களால் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சங்கைக்குரிய சோபித தேரர் ஞாபகார்த் உரை சிங்களத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

Read More

போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார  திலங்க ஜெயலால் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை மது போதையில் வாகனம் செலுத்திய 92 பேரை நீதி மன்றத்தில்…

Read More

மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிஸார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை…

Read More

ஒரு தாயின் கண்ணீர்

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நூரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏட்பாடு செய்யுமாறு…

Read More

தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!

– எம்.எஸ்.எம்.நூர்தீன் – கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது. இந்த…

Read More

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 இன் முதலாவது சட்டம் எனவும் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை…

Read More

காத்தான்குடி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஹர்த்தால்

– ஜவ்பர்கான் – காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும். இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 28 மாட்டு இறைச்சிக்கடைகளும்…

Read More