அனுர குமார கூறுகின்றார் என்பதற்காக பதவி விலக முடியாது
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறுகின்றார் என்பதற்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக முடியாது. நான் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்கவேண்டும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப் போன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எமது அரசாங்கம் கைதுசெய்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், சட்டத்துக்கு முரணாக நாங்கள் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எவன்ட் கார்ட்…
