Headlines

தம்மை விடுதலை செய்ய கோரி துமிந்த மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். கடந்த 08ஆம் திகதி தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனது சட்டத்தரணி ஊடாக…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம்…

Read More

ஈரான் அணு விஞ்ஞானி தூக்கில் போட ஹிலாரி கிளிண்டன்தான் காரணம்: டிரம்ப்

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார். அவரை சாத்தான் என்று வசைபாடினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்று பட்டம் சூட்டினார். தற்போது ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர்…

Read More

ஹிலாரி வெற்றி பெறுவதற்­கான சாத்­தியம்; கருத்து கணிப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது. எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஜன­நா­யக மற்றும் குடி­ய­ரசு கட்சி­களின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்­பிற்­கி­டையே கடு­மை­யான போட்டித் தன்மை நிலவி வரு­­கின்­றது. தேர்தல் பிர­சா­ர­ங்கள் அனைத்து மாநி­லங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நடத்­தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜன­நாயகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள்…

Read More

உயர்நீதிமன்றம் செல்லும் SLTJ

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை  வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக், துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர் சிங்கள, முஸ்லிம் சட்டத்தரணிகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவுகுடியகல்வு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடுசெய்த நிகழ்வில் பீ.ஜே. வருவதற்கு இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களம் அனுமதியளித்திருந்தது. அத்துடன், உத்தியோகபூர்வமற்ற முறையில்…

Read More