Headlines

2017ஆம் ஆண்டு தேர்தல் – பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல் நடைபெறும் என்று இறுதியான முடிவை அறிவித்தார்.

Read More

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பற்றிய விபரங்ளை வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக, உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்றை நிறுவியிருந்தார். எல்லை நிர்ணயம் தொடர்பில்…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் – பைஸர் முஸ்தபா

– எம்.ஆர்.எம்.வஸீம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரிப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தனியாக ஆட்சி நடத்த முடியாமல் உள்ளது  என மாகாண கபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். பண்டாரவளையில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இரு பிரதான கட்சிகளை உள்ளடக்கி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மேலும் பாதயாத்திரை எனும் பெயரில் மக்களை திசைத்திருப்பி தனிப்பட்ட சில நபர்களுக்காக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி…

Read More

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை

– சுஐப் எம்.காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று காலை (22/07/2016) மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக் கிளை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் உட்பட அக்கிராமத்தின் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விசேட அழைப்பை ஏற்று அங்கு பிரசன்னமாகிய அமைச்சர் பைசர் முஸ்தபா…

Read More

வரி ஏய்ப்பு செய்தால் சொத்துக்கள் அரசுடைமை

வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு இதுபற்றிய ஆலோசனையை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பதுளை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, அற்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை விடுத்தார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருமான வழிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை…

Read More

30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்

உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது…

Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் : விரைவில் நீதிமன்றத்திற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு…

Read More