Headlines

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால்…

Read More

காலியில் நில அதிர்வு!

காலியில் இன்று (27) சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபுகல பகுதியில் இன்று அதிகாலை இந்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த நில அதிர்வு தொடர்பான தகவலை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எப்படியிருப்பினும் நில நடுக்கம் அல்லது நில அதிர்வு தொடர்பில் இதுவரை எவ்வித பதிவுகளும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு…

Read More

அந்தமானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அந்தமான்- நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானதாக டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே ஓடினார்கள். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்று…

Read More

கொலம்பியாவில் நிலநடுக்கம்

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில்    பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Read More

சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்

சீனாவின் சிச்சுவான் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை உண்டான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள நிலையில், பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நேற்று பின்னிரவு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வு அருகாமையில் உள்ள நான்கானா சாஹிப், கசுர், ஷேக்புரா…

Read More

இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

இத்தாலியில் நேற்று (24) இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர்உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

Read More

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பூமியதிர்ச்சி ரோமினும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 6.1 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனிய பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், முன்னாள் உப வேந்தருமான அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

Read More

மீண்டும் ஈக்வேடாரில் நிலநடுக்கம்!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று (22)  மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து 100 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும்…

Read More

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு…

Read More