Headlines

நுழைவுச்சீட்டுக்களை வழங்காத அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்காத அதிபர்களுக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். பரீட்சை நுழைவுச்சீட்டுக்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் கடந்த 15ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றை திருத்திக் கொண்டிருக்க வேண்டுமென நான் அறிவுறுத்தியிருந்தேன். சில அதிபர்கள் இன்னமும் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்கவில்லை என பெற்றோரும் பரீட்சார்த்திகளும் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை உடனடியாக…

Read More

சிறந்த பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக அதிக நிதி!

“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இச் செயற்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியன் ரூபா முதல் 400 மில்லியன் ரூபா வரை நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பணவசதிகள் தேவைப்பட்டால் அதிகளவிலான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவு, ஆக்கத்திறன், மற்றும் மனிதநேயமுள்ள சிறுவர்களை உருவாக்கும்…

Read More

2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 2ம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு டிசம்பர் 17ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாளை முதல் ­வவுச்­சர்கள் வழங்கப்படும்

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார். அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை…

Read More

இலவசச் சீருடைத் திட்டத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனூடாக…

Read More