Headlines

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு உரிமைகள் இல்லை: இத்தாலி எச்சரிக்கை

பொது வாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது என்று பிரிட்டனுக்கு இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து முறைப்படி வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read More

எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார் கேமரூன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜூன் 23-ம் தேதி இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். அவரை தொடர்ந்து தெரசா மே இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது,…

Read More

டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா!

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர். இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார். இதன்படி நாளை…

Read More

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டு வெளியேறும் தீர்­மானம் நன்­மைக்­கு­­ரி­ய­தல்­ல – டேவிட் கெமரூன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்­தா­னியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார். ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி­யுள்­ளார். பிரித்­தா­னிய பிர­­தமர் டேவிட் கெமரூன்  விலக போவதாக அறிவித்த பின்னர் நாடா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆற்­றிய உரை­யில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­­ருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய…

Read More

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகவுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் அலுவலகலத்துக்கு வெளியிலிருந்து தனது மேற்படி முடிவை கமெரோன் அறிவித்திருந்தார். தள்ளாடும் கப்பலை, எதிர்வரும் வாரம் மற்றும் மாதங்களில் சீர் செய்ய எத்தனிக்கவுள்ளதாக கமெரோன் தெரிவித்துள்ளார்.(tm)

Read More

ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எங்கிருந்தாலும் மீட்டெடுக்கப்படும்

ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை…

Read More

டேவிட் கேமரூன் முகத்தில் காரி துப்பிய, நைஜீரிய அதிபர்

லண்டனில் ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாடு நடைபெற இருந்த நேரத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ராணி எலிசபத்திடம்  ” உலகிலேயே ஊழலில் அற்புதமான நாடுகளாக நைஜீரியாவும் ஆப்கானிஸ்தானும் திகழ்கிறது ” என்று பேசியது வெளியாகியுள்ளது ” Nigeria and Afghanistan are fantastically corrupted states” – David Cameron இதற்கு நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி மின அழகிய பதிலை கேமரூனுக்கு கொடுத்துள்ளார். ‘கேமரூன் நைஜீரிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறு…

Read More

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு!

ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு அளித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில்…

Read More

ஜனாதிபதி பிரித்தானியா பயணம், டேவிட் கமருனுடன் முக்கிய பேச்சு

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம்…

Read More