Headlines

ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…

Read More

நாடு கடத்தப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜர்!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும்…

Read More

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

வழக்கு விசாரணை தாமடைவது தனிப்பட்டவர்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாகுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் புவனேக அலுவிகார (Priyasad Depp and Buwaneka Aluwihare) ஆகியோர் தலைமையில் வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி்ட்டார். வழக்கு விசாரணை தாமதமடைவது குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். நீதியமைச்சு கொழும்பு…

Read More

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏழு இந்தியர்களும் தொடர்ந்தும் காவலில்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் வௌிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் 1075 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 650 குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு…

Read More

காணாமல் போன ஆவணங்களை கண்டறிய நீதிமன்றங்கள்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பிலும் இராணுவத்தின் வசமிருந்த ஆவணங்கள் தொலைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் அதேவளை, அதனை கண்டுபிடித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை இராணுவ பொலிசாரை உள்ளடக்கிய சிறப்பு விசாரனைப்பிரிவுகளைக் கொண்ட விசாரணை நீதிமன்றதத்தினை இராணுவத் தளபதி அமைத்துள்ளதாக…

Read More

நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார். அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி…

Read More

ஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 16.19 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஜோர்தான் பிரஜையான அமர் யூசுப் அல் சுதே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு பலாமரச் சந்தியில் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது…

Read More

பள்ளிவாசல் மீது கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை

பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண…

Read More

குமார வெல்கமவின் மனு ஒத்திவைப்பு

தன்னைக் கைது செய்வதை தடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் பாகங்கள் சில கொள்வனவு செய்யப்பட்ட வேளையில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அதற்கான தடை உத்தரவை வழங்கமாறு கோரியே குமார வெல்கம நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை…

Read More