Headlines

கனடாவில் விபத்து – தாயும், மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர்…

Read More

கனடாவில் முதன்முறையாக நீதிபதியான திருநங்கை

கன­டாவில்  முதன்­மு­றை­யாக திரு­நங்கை ஒருவர் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ளார். கன­டாவின் வர­லாற்றில் முதன் முத­லாக அந் நாட்டின் மனிடோபா மாகா­ணத்தை சேர்ந்த திரு­நங்­கை­யான காயெல் மகென்ஷி மாகாண நீதி­ப­தி­யாக அதி­கா­ர­பூர்­வ­மாக பத­வி­யேற்­றுள்ளார். மனி­டோபா பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டக்­கல்­வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்­க­றி­ஞ­ராக பட்டம் பெற்றார். சட்­டத்­து­றையில் அவ­ருக்கு இருந்த திற­மையின் அடிப்­ப­டையில், அவரை மனி­டோபா மாகாண நீதி­ப­தி­யாக தெரிவு செய்­துள்­ள­தாக சட்­டத்­துறை அமைச்­சகம் கடந்த டிசம்­பரில் அறி­வித்­தி­ருந்­தது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வின்­னிபெக் நகரில்…

Read More

கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு

கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

Read More