Headlines

திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு 3930 மில்லியன் நிதி ஒதுக்கீடு

– அஷ்ரப். ஏ. சமத் – “நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும்  அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று  முழு அமைச்சரவைக்கும்  காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீா் நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன்.   அதன் நிமிா்த்தம்  அமைச்சரவை உடனடியாக 3930 மில்லியன் ரூபாவை திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு நிதி ஓதுக்கித் தந்தது”. என அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். சஜித் பிரேமதாச இன்று(19) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள அவரது  அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா்…

Read More

பிரதமர் பதவிக்காகக் களமிறங்கமாட்டேன்! ஜனாதிபதி

ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன். அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு…

Read More

நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க அமைச்சரவை அங்கிகாரம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், புதிய தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்குமான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை – சேர்பியா இடையே புதிய விமான சேவை

இலங்கை மற்றும் சேர்பியா  ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையில் அங்கீகாரத்தை பெறுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை மேற்படி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

அவன்கார்ட் உடன்படிக்கை ரத்து

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து அதனை கடற்படையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததுடன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ,…

Read More

அனுர குமார கூறு­கின்றார் என்­ப­தற்­காக பத­வி விலக முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால், சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எவன்ட் கார்ட்…

Read More

அவன்கார்ட் தொடர்பில் விஷேட அமைச்சரவை கூட்டம்

அவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக  விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவன்-கார்ட் தொடர்பில் தற்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனதிபதி இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவன்-கார்ட் நிறுவனம் தொடர்பில் உரிய விசாரணைகள் நீதியாக நடைபெறாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சரவையில் றிஷாத் கொந்தளிப்பு: அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….

Read More