Headlines

அந்நிய செலாவணி அதிகரிப்பு!

வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தில் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 523.50 மில்லியன் அமெரிக்க டொலாராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு 563.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 58,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். இவர்களில் 38,677 ஆண்களும் 20,049 பெண்களும்…

Read More

பணிப்­பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு தொழி­லுக்கு செல்லும் பணிப்­பெண்­களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் பயிற்­சியின் ஆரோக்­கி­யத்­தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்­பாக ஆராய்ந்து இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக பணி­ய­கத்தின் ஊட­கப்­பேச்­சாளர் உபுல் தேஷப்­பி­ரிய தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இது­வரை காலமும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்­காக…

Read More

வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கவுள்ளார்

Read More