Headlines

இலங்கையுடன் ஒத்துழைக்க தயார்- சீசெல்ஸ்

இலங்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று சீசெல்ஸ் அறிவித்துள்ளது. சீசெல்ஸின் சமூக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சன்ட் மேரிடன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் உறவை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தநிலையில் சீசெல்ஸ் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க அந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட தயார்…

Read More

சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

“எனது கழுத்தை அறுத்து உயிர்துறப்பேன்” – மஹிந்த

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி…

Read More

இணைய வழி முறைப்பாடு விரைவில்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில், இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மையால் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிக்க மக்கள் பின்னிற்பதாகவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இணையத்தின் ஊடாக முறைப்பாட்டினை தெரிவிக்கும் செயல்திட்டமானது நடைமுறைப்படுத்தும் வரை பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 1954 என்ற…

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல்  ஏற்றிச் சென்ற லொறி சாரதி ஒருவரிடம் 1500 ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் புகார்

புகையிரத திணைக்களம் , மின்சார சபை உட்பட பல நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் 20 கோப்புக்கள் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு கையளித்ததாக  ஊழல் தடுப்பு முன்னனி தெரிவித்துள்ளது.

Read More

விசாரணையில் இன்று பங்கேற்க முடியாது! மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார். எனினும் இன்று அவரின் சார்பில்…

Read More

இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்கு அதிகாரிகள் இல்லை!

இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பில் கடந்த ஆட்சியில் 6,000 முறைப்பாடுகளும், தற்போதைய ஆட்சியில் 4,000 முறைப்பாடுகளும் என மொத்தமாக 10, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனாலேயே விசாரணைகள் தாமதமடைவதாகவும் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாட்சிகளைத் தம்மிடம் வழங்குமாறும், சாட்சி வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க தாம்…

Read More