Headlines

பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர். நேற்று முன்தினம் (22) இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது. காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள்…

Read More

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால்  தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது

கடந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி  யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் தொடர்பில் அஸாத் சாலி

-எம்.ஆர்.எம்.வஸீம் – பொர­லஸ்­க­முவ  ஜும் ஆப் பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் சம்­பவம் தொடர்பில் பொர­லஸ்­க­முவ பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளோம். அத்­துடன் பொலிஸ்மா அதி­ப­ருடன் தொடர்­பு­கொண்டு சம்­பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று முன்­தினம் (6) மாலை சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் இடம்­பெற்ற செய்­தியை கேள்­வி­யுற்று அங்கு சென்­றி­ருந்த…

Read More

ஆசிரியர் தாக்கி அதிபர் வைத்தியசாலையில்

நேற்று (12) வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் எந்த காரணத்துக்காக அதிபரைத் தாக்கினார் என்பது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவனை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read More

ப்ரெடி கமமே மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஊடகவியலாளர் ப்ரெடி கமமே மீது, நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அரசாங்கம் கண்டித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷனி குணதிலக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ரெடி கமகே, இன்று நீர்கொழும்பு நகர சபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று தீர்ப்பு!

தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது. தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய…

Read More