Headlines

உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்: பாதாள உலகக்குழு உதவி

பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின்…

Read More

சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் – மலேஷிய இணையதளம்

-எம்.ஐ.அப்துல் நஸார் – மதகுருமார் மீதும் இராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்துவதை விடுத்து சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் என மலேஷிய இணையதளம் காட்டமான அறிவுரை வழங்கியுள்ளது. எப்.எம்.ரி என்ற இணையத் தளமே தாக்குதலில் இலங்கை இராஜதந்திரி மீது தாக்குதல் மேற்கொண்டோருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது.

Read More

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைப்பு

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார். அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று (6) அறிவித்துள்ளது. இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜதந்திரி ஒருவர் மீது தக்குதல் நடத்துவது பாரதூரமான நிலைமை எனவும் மலேசியாவில்…

Read More

அன்சார் விவகாரம்: பிரதமர் கண்டனம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

இப்றாஹீம் அன்சாரின் தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது. என்பதை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் வருத்தம்!

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்….

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரிய தண்டனை வழங்குங்கள்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று மாலை(06/09/2016) மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத் அவர்களை, அமைச்சர் றிசாத் சந்தித்து தனது கடுமையான கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்துவார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அங்கு…

Read More