Headlines

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.

Read More

தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத்…

Read More

உயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று (11)கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

உயர்தரப் பரீட்சையை ஏப்ரலுக்கு மாற்றுவது குறித்து பேச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால்…

Read More

நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்..

– இக்பால் அலி – 2015 ஆம் ஆண்டுக்கான  க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய  குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்றமாணவன் பழீல் முஹமட் ஆகீல் முஹமட்  ஆகில் இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளர். இன்று வெளியான 2015 ஆம் ஆண்டுக்கான  க. பொ. த. உயர் தரப் பரீட்சை பெறு பேற்று அடிப்படையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில்…

Read More

நமது சமூகம் உயர்வான நிலையை அடைய, கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அ.இ.ம.க வின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற குருநாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலை மாணவன் முஹம்மத் அகீல் மற்றும் முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z புள்ளியையும் பெற்று சாதனை படைத்துள்ள கலைப்பிரிவு மாணவி றிஸ்வினா…

Read More

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external)ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Read More

க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்

எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்­சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார். இவர்களுள் நான்கு இலட்­சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரிகள் எனவும் இரண்டு இலட்­சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் மேலும் தெரி­வித்தார். இம்­முறை 4,670 பரீட்சை மத்­திய நிலை­யங்களை அமைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ள­தோடு கடந்த வருடம்…

Read More