Headlines

கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியளவில் மூடப்படும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது. அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோ ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள் தயாரித்துள்ளனர். விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளிடம் நட்பு ரீதியில் பழகி அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்டது….

Read More

சென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து

சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்  விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு…

Read More

கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டில் கடந்த செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல முயற்சித்த போதிலும், அந்த கடவுச்சீட்டில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஈகே 348 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு அவர் கடந்த செவ்வாய்கிழமை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அவரை செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் நேற்று சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More