Headlines

ஸிகா வைரஸ் தொடர்பில் விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்

ஸிகா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார தரப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியிருந்ததாக  சுட்டிக்காட்டிய அவர், ஆயினும் இலங்கையில் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தொற்றுநோய்…

Read More

ஷிகா வைரஸ்: சர்வதேச அளவில் அவசர நிலை பிரகடனம்

ஷிகா வைரஸ் வேக­மாகப் பரவி வரும் நிலையில் சர்­வ­தேச அளவில் உலக சுகா­தார அமைப்பு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­படுத்­தி­யுள்­ளது . தென் அமெ­ரிக்க நாடு­களில் வேக­மாகப் பரவி வரும் ஷிகா வைரஸ் பிற நாடு­க­ளுக்கும் மெது­வாக பரவி வரு­கி­றது. மேற்கு ஆபி­ரிக்­காவில் எபோலா வைரஸ் பர­வி­ய­போது நட­வடிக்கை எடுக்க தாம­த­மா­கி­யதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்­ளது. இது குறித்து உலக சுகா­தார அமைப்பின் இயக்­குநர் மார்­கரெட் சான், ஷிகா வைரஸால் உலகின் பிற பகு­தி­க­ளுக்கும் அச்சுறுத்தல் ஏற்­பட்­டுள்­ளது….

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை

இலங்கைக்கு வரும் பயணிகள்   ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க  கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை…

Read More