Headlines

பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

”இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்”

இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து உணவு வகை­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அகில இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­திய புதிய வரி கார­ண­மாக இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து வகை உணவு வகை­களின் விலை­களும் 10 ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

Read More

VAT வரி: கொத்து ரொட்டியின் விலை உயர்வு

கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஹொட்டல் உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொத்துரொட்டி, டெவல், ரைஸ் போன்றவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. சோஸ் வகைகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின்…

Read More

அனுமதியின்றி விலையை உயர்த்தினால் சட்ட நடவடிக்கை – றிஷாத்

–  சுஐப் எம். காசிம் – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாத் கடுந்தொனியில் தெரிவித்தார். வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரத்தில் நடைபெற்ற தேசிய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விழாவில் கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், சிவமோகன் எம்.பி, மாகாண சபை உறுப்பினர்களான…

Read More

உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒரு மூடை உரத்தின் சில்லரை விலையை அதிகபட்சம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Read More

மரக்கறி விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

Read More

பாண் விலை அதிகரிப்பு

அனைத்து பேக்கரி உற்பத்தி விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் விலையும் பனிஸ் ஒன்றின் விலையும்  5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 87 ரூபாவாக இருந்த கோதுமைவின் விலை 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More