Headlines

ஹெரோயின் கடத்தல் முறியடிப்பு

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படவிருந்த ஹெரோய்ன் கடத்தல் முயற்சிமுறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை நேற்றுமீட்கப்பட்டுள்ளது. இதன்போது பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3.4 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திய மூன்று பாகிஸ்தானியர்கள்கடந்த வாரத்தில் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று (8) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது குற்றவாளிகள் வசம் இருந்து 8 கோடி இலங்கை ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக…

Read More