Headlines

ஒருபோதும் அரசு சமஷ்டியை வழங்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை வழங்காது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஒருநாள் வேலைத்திட்டம்!

உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய வேலைத்திட்டங்களை சவாலாகக் கொண்டு ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நாளை காலை 8 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் பிரதி செயலாளர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் உள்ளிட்டோர்…

Read More

ஜனாதிபதி எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்கள் வைத்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு எவருடனும் ஒப்பந்தங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை, அவர் எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்களை வைத்துள்ளார் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் எந்தவிதமான அரசியல் ஒப்பந்தங்களும் இல்லை. அவர் ஜனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவே செயற்பட்டு…

Read More