Headlines

பாகிஸ்தான் அணு ஆயுதம் குவிப்பு: அமெரிக்கா கவலை

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் வின்சென்ட் ஸ்டீவார்ட், அந்த நாட்டின் செனட் சபை ஆயுத பணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனது அணு ஆயுத பாதுகாப்பை பாகிஸ்தான் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது அணு ஆயுத குவிப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து இருக்கிறது” என்றார். மேலும் அவர், “பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read More

7 வயது சிறுவனுக்கும் 6 வயது சிறுமிக்கும் திருமணம்; பாகிஸ்தானில் 6 பேர் கைது

பாகிஸ்­தானில் 7 வயது சிறு­வ­னுக்கும் 6 வயது சிறு­மிக்கும் திரு­மணம் நடத்தி வைத்த குற்றச்­சாட்டில் ஆறு பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மேற்­படி சிறார்­களின் பெற்றோர் மற்றும் திரு­மண வைப­வத்தின்  சாட்­சி­க­ளான 6 பேரும் பாகிஸ்தானின் கிழக்குப் பகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டனர் என சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யான  சைஃபுல்லா கான் தெரி­வித்­துள்ளார். இவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டால் 6 மாத சிறைத்­தண்­டனை மற்றும் 50,000 பாகிஸ்தான் ரூபா அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்­தானில்…

Read More

பாகிஸ்தான் – இலங்கை உறவு மிகச் சிறந்த வகையில் உள்ளது

இலங்கையுடனான உறவுகள் மிகச் சிறந்த வகையில் காணப்படுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சயிட் சகீல் ஹூசைன், இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்ள இரு தரப்பும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் புத்திஜீவிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இவ்வாறான இரு தரப்பு விஜயங்கள் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்கிறது

இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று (5) செய்து கொண்ட 8 உடன்டிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு…

Read More

நவாஸ் ​ஷரீப் கண்டிக்கு விஜயம்

நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ​ஷெரீப் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கும் செல்லவுள்ளதுடன் அங்கு மரக்கன்று ஒன்றினையும் நடவுள்ளார். நேற்று (5) முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் செய்த உதவிகளை மறக்கமாட்டோம் – மைத்திரி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மனித உரிமைகள்…

Read More

நினைவு சின்னம் வழங்கி வைப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாரியார் திருமதி கன்சுல் நவாஸ் ஷரீப் இன்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கிழ் இயங்கும் லக்ஷல காட்சி அறைக்கு விஜயம் செய்தார். இதன் போது லக்ஷல நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின உபவேந்தருமான எம்.எஸ்.இஸ்மாயில் பிரதமரின் பாரியாருக்க நினைவு சின்னம் ஒன்றினை வசழங்குவதை படத்தில் காணலாம்.

Read More