Headlines

நீரை விநியோகிப்பதில் சிக்கல்

மின் தடை அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை  விநியோகிப்பதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார். எனினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

கொழும்பில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஹங்வெல்ல, மீபே, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, கலு அக்கல, ருக்மல்கம, பெலவத்த, கொடகம, பன்னிப்பிட்டிய, மத்தேகொட ஆகிய பகுதிகளிலேயே நாளை (20) பிற்பகல் 01 மணி முதல் மறுநாள் 21 ஆம் திகதி வரையிலான 16 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது….

Read More