Headlines

துருக்கி விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் நகரில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து பெருமளவில் உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், டியார்பகிர் விமான நிலையத்தில் வி.ஐ.பி. அறைக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகள்…

Read More

துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இட நெருக்கடியை குறைக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து…

Read More

இஸ்தான்புல் கோர்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக…

Read More

துருக்கில் மாபெரும் பேரணி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சிப்படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி…

Read More

துருக்­கியில் 42 ஊட­க­வி­யலாளர்­களை கைது செய்ய உத்­த­ரவு

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத ஆரம்­பத்­தில், துருக்கியில் தோல்வியடைந்த இரா­ணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் ஆயிரக்கணக்கான கைது நடந்தன. இத­னி­டையே மக்கள் விரும்­பினால் தூக்கு தண்­ட­னைக்கு ஆதர­வ­ளிப்­ப­தாக துருக்கிய ஜனா­தி­பதி எர்­டோகன் தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றியம்,…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது. இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு…

Read More

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது. அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும்…

Read More

எர்துகான் அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்

– Mohamed Basir – துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது. • கடந்த வெள்ளி 15 ஆம் திகதி மர்மரைஸ் ஹொட்டலில் நான் இருந்தேன். அப்போதுதான் புரட்சிக்கான சதிமுயற்சி குறித்து எனக்கு தெரியவந்தது. • புரட்சி இரவன்று துருக்கி மக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் என்னுள் இருந்தது. • ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளுக்கு இறங்குமாறு மக்களுக்கு நான் விடுத்த அழைப்புக்கு மக்கள் உடனடியாக…

Read More

உண்மையை காத்த ஒரு பொய்!

Mujeeb Ibrahim– சதி வலையில் எர்தொகான் உயிர் தப்பிய சம்பவம்: அந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர். அங்கே அவர்கள் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டனர். ஆனால் இறைவனின் உதவியால் அவர்கள் அங்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே எர்தொகான் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தார்! இருந்தும் ஆபத்து நீங்கிவிடவில்லை, அவர் அங்கிருந்து பயணம் செய்த விமானம் (business Jet) பின்னர் வானில் வைத்து…

Read More

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…

Read More

வீதிகளில் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு, பாதுகாப்பு பணியில் துருக்கிய பெற்றோர்கள்

துருக்கி இராணுவ சதி புரட்சியினை துருக்கி மக்கள் தோல்வியடைய செய்த பின் நகரங்களின் பாதுகாப்புக்காக துருக்கிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் தூங்க வைத்து கொண்டு நகரின் பாதுகாப்பு கடமையில் கண்காணிப்புடன் இருந்தனர்.

Read More

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதியை முறியடித்த துருக்கி மக்கள்!

துருக்கி நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தினரை பல அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த இராணுவப் புரட்சியை முறியடித்து விட்டதாக அரசுத் தரப்பு கூறினாலும் பல்வேறு பகுதிகளில் பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட…

Read More