Headlines

ஒருபோதும் அரசு சமஷ்டியை வழங்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை வழங்காது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

எனது மகன் அரசியலில் ஈடுபட மாட்டார் – சந்திரிக்கா

தனது புதல்வரான விமுக்தி குமாரதுங்க எந்த காலத்திலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி, கட்சியின் தலைமையகத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் யாரிடமும் பதவிகளை கேட்க மாட்டேன். எனது மகன் இங்கு அரசியலில் ஈடுபட வரமாட்டார். குடும்ப ஆட்சி நாட்டில் தொடர்ந்தும்…

Read More

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு  நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Read More

தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

விஜயவின் நினைவு நிகழ்வில் மஹிந்த பங்கேற்றமை வியப்பை அளிக்கிறது!

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விஜயகுமாரதுங்கவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்காத ஒரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இவ்வாறான ஓர் பின்னணியில் விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியமை ஆச்சரியமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,மகிந்தவிற்கும் தமது கணவருக்கும் இடையில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காதவர் நினைவு நிகழ்வில் பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக சந்திரிகா…

Read More

மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்

– எம்.எம் மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ.  பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால்  அவரின் தலைமையின் கீழ் செயற்பட…

Read More

சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு

– ஷம்ஸ் பாஹிம்  – சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா தெரிவித்தார். ஆனால், நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பரவாயில்லை கட்சியைத் துண்டாடியாவது தமக்கு எதிரான குற்றங்களை மறைக்க ஒரு தரப்பினர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் சுதந்திரக்கட்சி பிளவு குறித்து கருத்துத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி துண்டாடப்படுவது ஜனநாயக்திற்கு அச்சுறுத்தலாகும்.ஜனாதபதி…

Read More

மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

Read More