Headlines

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிஷாத்துடன் சந்திப்பு

சாய்ந்தமருது விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து அந்தப் பிரதேசத்தின் நெல் உற்பத்தி தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். தமது சங்கம் விதை நெல் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்த அவர்கள், தமக்கு நெல் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் யு. எல். ஏ. வஹாப், செயலாளர் எஸ்….

Read More

முஸ்லிம்களுக்கெதிரான வீண்பழிகளைக் கவனமாகக் கையாள வேண்டிய தருணம் இது!

முஸ்லிம் சமூகத்தின் மீதான வீண் பழிகளையும், அபாண்டங்களையும் நாம் பொறுமையாகவும், அவதானத்துடனும் கையாள்வதன் மூலமே அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய மைதானத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (24/06/2016) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இப்தாரில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது, இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களையும், கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றது….

Read More

சாய்ந்தமருதில் அ.இ.ம.கா வின் கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரம்

– எம்.வை.அமீர் – சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாதர்களுக்கும் இளைஞர்களுக்குமான கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அண்மையில் சாய்ந்தமருதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் கிளைகள் அமைக்கப்பட்டு ஏ.எல்.எம் அன்வரை அமைப்பாளராக கொண்டு மத்திய குழுவும் அமைக்கப்பட்டது. ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதிற்கான 17 பிரிவுகளுக்கும்…

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

– அஸ்லம் எஸ்.மௌலானா – அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார்…

Read More