Headlines

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

சிசிலியா கொத்தலாவவின் விளக்கமறியல் நீடிப்பு.!

முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். சிசிலியா கொத்தலாவலவின் உடல் நிலை பற்றிய வைத்திய அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணகளை மேற்கொள்ள கால அவகாசம் தருமாறு குற்றபுலனாய்வு விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின்…

Read More

புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

கான் கடிகார கோபுர சுற்றுவட்டப்பகுதியில் துறைமுக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் கொழும்பு புறக்கோட்டையை சுற்றியுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் காரணமாக மோதரையில் இருந்து மட்டக்குளி திசைக்கு செல்லும் ரெக்லமேசன் பாதை  முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி  இப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சந்திரசிறி  மகாகமகே கூறினார்.

Read More

இன்று முதல் சி.சி.டி.வி கெமராக்கள் அமுல்

105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று (4) முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.

Read More

நடு வீதியில் திடீரென தடம்புரண்ட கண்டெய்னர்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி  மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர், பதுளை போகாமடித்தை என்ற இடத்தில்  நடுவீதியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பயணித்தனர். இருவரும் காயங்களுக்குள்ளாகிய போதிலும் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிசார் விபத்து குறித்து  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

மின்தடையால் பங்குச் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையம் அறிவித்துள்ளது. மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகவே பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பங்குப்பரிவர்த்தனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

கொழும்பில் புதிய படகு சேவை

உல்லாசப்பிரயாணிகள் கொழும்பின் அழகை கண்டுகளிக்க படகு சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப் ​போவதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார். அண்மையில் பத்தரமுல்ல, தியத்த உயன கடற்படை படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் வெள்ளவத்தை வரையிலான படகு போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்திற்கு உதவி வழங்கவுள்ள நெதர்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி ஜோன்ஏன் டுர்னேவோட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த கேளிக்கை விடுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த…

Read More

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…

Read More

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பாரிய வாகன நெரிசல்

புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம் செய்துள்ளமையால், கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்டையில் கொழும்பு புறக்கோட்டையை நோக்கி செல்லும் வாகனங்கள் சற்றும் நகர முடியாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளிலும் காலி வீதியிலும் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமை…

Read More

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும், காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த…

Read More

இரவு நேரங்களில் நரித்தனமான செயற்படும் சிங்களே அமைப்பினர்

சிங்களே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்களில் நரித் தனமாக செயல்படும்  சிலரால் சிங்கள இனத்துக்கே அவமானமாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று (6) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ‘சிங்களே என்ற ஓர் இனம் தெரியாத குழுவொன்று தற்பொது நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது…

Read More

சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!

கொழும்பு – கிரான்பாஸ், மாதம்பிடிய பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More