Headlines

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

இன்று உகண்டா நோக்கி பயணமாகியுள்ள மஹிந்த ராஜபக்ச!

பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார். உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா முசெவெனி 6வது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு இதில் கலந்து கொள்ள மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மஹிந்த அங்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த, தனசிறி அமரதுங்க உள்ளிட்டோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

மஹிந்த உகண்டாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத இறுதியில் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டாவின் பிரதியமைச் சர் ஒருவரின் அழைப்பினை ஏற்றே மஹிந்தராஜபக்ஷ அந்நாட்டுக்கு பயணிக்கவுள் ளார். அவருடன் காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த மற்றும் உதித்த லொக்கு பண்டார ஆகியோரும் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் டுபாய் வழியாகவே உகண்டாவின் கம்பாலா நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More