Headlines

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே  உயிரிழந்துள்ளனர்.

Read More

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம்-கம்பரிகஸ்வல பிரதேசத்தில் கஞ்சா செய்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்காகசென்ற பொலிஸாரே குறித்த நபரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மான் இறைச்சி வைத்திருந்த நபரை கைது செய்த பொலிஸார் இவரிடம் இருந்து 10 கிலோகிராம் மான் இறைச்சியையும் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Read More

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கடிதம் கொண்டு வந்த புறாக்கள்

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப கல்லூரியில், கடிதப் பரிமாற்றத்திற்கு பறவைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலான நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் மாணவியருக்கு பறவைகளை கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது. 12 பறவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை…

Read More