இன முரண்பாடுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படாது – மங்கள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டுவதனை…
