Headlines

ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் சீனா­வுக்கு பய­ண­மா­கின்றார். சீன ஜனா­தி­ப­தியின் அழைப்­பை­யேற்று எதிர்­வரும் 25 ஆம் திகதி சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருப்­ப­துடன் சீன ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் சீனாவில் நடை­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்­டிலும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் சீன ஜனா­தி­பதி ஷி. ஜின்பின் உள்­ளிட்ட பல நாடு­களின் தலை­வர்கள்…

Read More

வித்தியாவின் படுகொலைக்கு விஷேட நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வித்தியாவின் படுகொலையுடன்…

Read More

துமிந்த சில்வாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கபட்ட பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அத்தனை பேரும் கடும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் துமிந்த சில்வாவின்…

Read More

விஹாரமகாதேவி பூங்காவில் இன்று முதல் இலவச WiFi

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தமே நாட்டிலுள்ள அதர்மங்களை அழிக்கும்!” – தலைவர் ரிஷாட்!

தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று தீபாவளியைக் கொண்டாடும் சகல தமிழ் சகோதரர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட இத்தினம், கெட்ட எண்ணங்கள் நிலைப்பதை எதிர்க்கிறது. மானிடப்பிறவிகள் மத்தியில், தீய எண்ணங்களை உருவாக்கும் எந்த சக்திகளும் நிலைக்காது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது. …

Read More

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இன்று,  வெள்ளிக்கிழமை (6) ஜும்மா தொளிகைக்கும் பின், மருதானை பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி பலஸ்தீன  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாத சட்டவிரோத இஸ்ரேலுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகல முஸ்லிம்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு

செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்தது. சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி

நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி இருப்பதாக வேற்று கிரகவாசிகளை நம்புவோர் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்தின் பிரமிடுகள் வேற்று கிரகவாசிகளின் கண்காணிப்பில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என பலரும் நம்பி வருகின்றனர். ஆகவே, வால் நட்சத்திரத்தில் உள்ள இந்த மாபெரும் கல்சவப்பெட்டி வேற்று கிரகவாசிகளுக்கானதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது…

Read More

குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் அரசியலுக்கு திடீரென நுழைந்தவன் அல்ல, எனக்கு 49 வருடகால அரசியல் அனுபவம் காணப்படுகிறது. கட்சி தொடர்பான தீர்மானங்களின் போது ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற அமைதிப் புரட்சிக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். அந்த…

Read More

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்கள் அமைச்சர் றிஷாத்திற்கு  அமோக வரவேற்பு

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அமைச்சரை அழைத்துசெல்வதையும் அமைச்சரின் உரைக்காக காத்திருப்பதையும் படத்தில் காணலாம்.  

Read More

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு  நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…

Read More