Headlines

தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு

உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்…

Read More

50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து தீவில் முதல் குற்ற வழக்கு

இங்கிலாந்தில் உள்ளது ஸ்காட்லாந்து. அங்கு கன்னா என்ற ஒரு குட்டித் தீவு உள்ளது. அதன் மக்கள் தொகை 26 பேர் தான். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடப்பதில்லை. எனவே, இங்கு போலீஸ் நிலையம் எதுவும் இல்லை. கடந்த 1960–ம் ஆண்டில் இங்குள்ள குரு தேவாலயத்தில் ஒரு மரப்பலகை திருட்டு போனது. அதை திருடியவர் யார் என இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் 55 ஆண்டுகளுக்கு…

Read More

ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது – அதிபர், ஆசிரியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழிநுட்ப கூடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் இன்றைய நிகழ்விலேயே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு லட்சத்து 20ஆயிரம் ஆசிரியர்களின் நியமனம், சம்பள பிரச்சினை ஆகியவற்றை உடனடியாக தீர்க்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வியமைச்சு மற்றும் மாகாண சபைக்கு கீழ் சேவை புரியும் அனைத்து…

Read More

எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காது….

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி தேர்தலின் மூலம் கிடைத்த திருப்புமுனை குறித்து பேரதிர்ச்சி க்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன, நாடு ஒரு குடும்பத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்க இனிமேலும் இடமளிக்கப்படாது என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார். “நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்துள்ள போதும் நான் தான் ஜனாதிபதி என்பதனை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”யென ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

கொழும்பு துறைமுகத்தில் மிதக்கும் நூலகம்!

எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு புத்தகங்களை கொண்ட மிதக்கும் உலக புத்தக கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. இக்கப்பலில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடயங்களைக் கொண்ட பல தரப்பட்ட புத்தக கண்காட்சியும் இடம்பெறுவதாக இக்கப்பலின் தொண்டர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அதிகாரியான எப். வின்ஸ்டன் தெரிவித்தார். அவர் மிதக்கும் புத்தகக் கப்பல் பற்றிய தகவல்களை மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கு மீண்டும் வருகை தந்துள்ள லோகோஸ் ஹோப் கப்பலின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்…

Read More

அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிவில் பாதுகாப்பு படையினர் நீக்கம்

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் சகல உறுப்பினர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான பணிப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

எதிர்வரும் தேர்தல் எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் தேர்தலாகும்_அப்துல்லா மஃறூப் எம்.பி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும் இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று (27) மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்…

Read More

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

(நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77) * அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60) * அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு…

Read More

பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு

இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார…

Read More

இலங்கை குழுந்தைகள் தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 2 இலட்சம் சிறுவர்கள் உயரம் குறைந்தவர்களாக உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள்மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 மில்லியனுக்கு அதிகமான இலங்கை சிறுவர்கள் இரத்த சோகை நோயிற்கு உள்ளாகியிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளார். காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை சிறுவர்களின் விளையாட்டு…

Read More

எமது பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் கபிர் ஹாஷிம்

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரு­ணத்தில் அதனை சீர்­கு­லைத்து எமது கட்­சி­யின்­பெ­ய­ருக்கு பங்கம் விளை­விக்கும் வகை­யில் செயற்­படும் பிரி­வினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உள்­ளது என்று அமைச்சர் கபிர்­ஹாஷிம் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது தேசிய அர­சாங்­கத்தின் ஒரு­மித்த செயற்­பா­டுகள் மூல­மாக மக்­க­ளுக்கு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­கள் ­தொ­டர்­பில்­ ஒரு…

Read More

நல்லாட்சியை முன்னெடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள்   நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  பயணிக்குமாறு வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின்  தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை…

Read More