Headlines

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சீனா?

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் புதிய அரசுக்கு சீனா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசு மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த திட்டம் இலங்கைக்கு அவசியமானது, இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது. சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

Read More

தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ் ராவ் தரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது உதவியாளர் ஆனந்த் இன்னும் கொஞ்சம் வாதத்தை எடுத்து வைக்க வேண்டியுள்ளது…

Read More

கெசல்கமுவ ஓயாவில் கறுப்பு நிறத்தில் நீர்! மக்கள் விசனம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலிருந்து கழிவு தேயிலை தூளை கெசல்கமுவ ஓயா ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இதனால் கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

கத்தார் வாழ் வாகன சாரதிகளுக்கு, ஒரு எச்சரிக்கை..

M.a.g.m Muhassin கத்தார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள். முதற் குற்றமானால்; 500 ரியால்  அபதாரம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15  ரியால் விகிதம்  அபதாரம் ). 2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் +  டிரைவர்களுக்கு  7 நாள் சிறை. 3ம் குற்றமானால்…

Read More

சுவனத்தில் சிட்டுக் குருவிக் கூடொன்று கட்டுங்கள்…!

Shameela Yoosuf Ali வெள்ளவத்தை தொடர்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சப்னாவின் நினைவில்…! கனவுகளுக்குக் கால் முளைக்கும் வயது உனது நடந்ததெல்லாம் கூட கனவாக இருந்து விடக் கூடாதா..? விழுந்து சிதறியது நீயல்ல; எல்லோருடைய உள்ளங்களும் தான். இருபத்திரண்டாவது மாடியிலிருந்து நீயாகத் தான் விழுந்தாயா அல்லது யாராவது தள்ளி விட்டார்களாவென எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உன்னைத் தள்ளி விடும் கொடுமனது எவருக்கும் வாய்த்திருக்கக் கூடாது என்று உள்ளம் உள்ளுக்குள் பிரார்த்திக்கின்றது. காற்று வெளியில் உன் சிணுங்கல்கள், சிரிப்புக்கள்,…

Read More

மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு வித்திட்ட 10 பிரபலங்கள்

நஜீப் பின் கபூர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேல்வியடைவதற்குக் காரணமாக இருந்த விடயங்களை மூன்ற தலைப்புக்களில் நாம் இங்கு வரிசைப்படுத்தி இருக்கின்றோம். எமது இந்த மதிப்பீடு தொடர்பாகவும் இந்த வரிசைப்படுத்தல் ஒழுங்கு மீதும் முறன்பாடுகள் சிலருக்கு ஏற்படவும், இல்லை இந்தப் பட்டியலில் இந்த விடயங்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருக்கலாம். இது எமது பார்வை அவ்வளவுதான். 01. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு 02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம் 03. தூய்மையற்ற நிருவாக முறையும்…

Read More

புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் நாடு திரும்பி பணிகளை தொடர்வதற்கான சூழலை உருவாக்குக

-முஸ்லிம் மீடியா போரம் ஊடாக அமைச்சரிடம் கோரிக்கை- பிரௌஸ் முகம்மட் media forum requestகடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் நாடுதிரும்பி நாட்டுக்காக தமது பணிகளை தொடக்கூடிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய ஊடக அமைச்சராக பதவியேற்றுள்ள கயந்த கருணாதிலகவுக்கு முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் அனுப்பி…

Read More

ஆடிய ஆட்டம் என்ன?

மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் Aluthgama Beruwala Darganaharஅல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறான். தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை எடுக்கிறான். ஆட்சியை பெற்றவர்கள் அதை சரியாக பயன்படுத்தினால் அவர்களை அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான். அதே நேரம் ஆட்சியை பெற்றவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, மக்களை அடக்கியாண்டால் அவர்களின் அக்கிரமங்கள் தலைவிரித்து ஆடும் போது மரத்தை வேரோடு பிடுங்குவதுப் போல அவ்ஆட்சியாளர்களின் அதிகாரங்களை அல்லாஹ் பிடுங்கி, அதே மக்களுக்கு மத்தியில் அநியாயக் காரர்களை அல்லாஹ் இழிவுப்…

Read More

மாட்டிக் கொண்ட துமிந்த சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் அனைத்து கணக்குகளையும், சோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வெலே சுதா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகருடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரது கணக்குகளை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால்  ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிரி வண்டார எக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கனசே சிரச தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக கடமையாற்றியவா். இவா் பட்டதாரியும் ஊடக டிப்ளோமா பட்டப்படிப்பை ஸ்ரீ ஜெயவா்த்தன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா்.

Read More

மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம் ஆளுநர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை

அஸ்ரப் ஏ சமத் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் 06 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனா். வடக்கு – பல்லியக்கார, கிழக்கு – ஒஸ்டின் பொ்னான்டோ, சப்ரகமுவ – வி.எம்.ஏ. ஆர். பேரேரா, மத்திய மாகாணம் – சுரங்கினி எல்லாவல , வடமத்தி – பி. திசாநாயக்க, ஊவா மாகாணம் – சட்டத்தரணி ஜயசிங்க ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இம்முறை முஸ்லீம் கள் ஆளுனராக நியமிக்கப்படவில்லை. கடந்த 10 வருடமாக அலவி மௌலான பதவி வகித்தாா். இவர் முன்னாள் ஜனாதிபதி…

Read More

ஒப்பாரி வைக்கும் மஹிந்த ; முக்கிய புள்ளிகளுக்கு அவசர கடிதம்

பர்வின் சனூன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் படுதோல்வியடைந்து சிறுபான்மை மற்றும் பெருபான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து ஒதுங்கியிருப்பது அனைவரும் அறிந்த விடயமே. இது இவ்வாறு இருக்க, சற்றுமுன் தேர்தலுக்கு முன்னும், பின்னும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, “தான் மிகவும் நல்லவர் எனவும், தான் ஒரு தவறும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய மகன்கள்…

Read More