Headlines

அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் தலைமையில் புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு

அஷ்ஷேக் கைஷான் ரஷாதி அவர்களின் தலைமையின் கீழ் ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், Dr.சனிக், Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் “ஹையதுல் ஹுதா” தொண்டு நிருவணத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், ஹையதுல் ஹுதா நிருவணத் தலைவர் அஷ்ஷேக் கைஷான் ரஷாதி மற்றும் Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோர் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட…

Read More

அமைச்சர் ரிஷாத்துக்கு அமைச்சர் ஹக்கீம் உதவ முன்வர வேண்டும் ; பைஸர் முஸ்தபா.

வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை. சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என,  முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். வில்பத்து வனப்பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சி அரசியல் பேதம் பார்க்காது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு கை கொடுத்து…

Read More

அமைச்சர் சஜித் அமைச்சினை பொறுப்பெடுத்த ஒருமாதத்தில் 600 மில்லியன் சேமிப்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார். ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற்…

Read More

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை…

Read More

முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்

முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ…

Read More

போக்குவரத்து சபையால் போதுமான அளவு வசதி பயணிகளுக்கு வழங்கல்

இலங்கை போக்குவரத்து சபையால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையால் அவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு பிரதான நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் நன்மை கருதி தூரசேவை பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More

எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் – அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அனுதாபச் செய்தி

(அமைச்சரின் ஊடகப்பிரிவு) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  உதவிப்பணிப்பாளராக நீண்டகாலம் பணிபுரிந்த சகோதரர் எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார். இன்று காலை இவரின் வபாத் செய்தியை நான் அறிந்து கொண்ட போது மிகவும் கவலையடைந்தேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரியாக கடமைபுரிந்ததுடன்  என்னுடன் நெருக்மானவராகவும் செயற்பட்டார். பல புதிய விடங்களைப் பற்றி சிந்திப்பவராகவும்  எச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை கடைப்பிடிப்பவராகவும் திகழ்ந்தார். வடகிழக்கில்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உருவாகிறது அரபு லீக்கின் புதிய இராணுவம்

அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும் முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த…

Read More

பல்கலை புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு…

Read More

“மக்கள் சேவைக்காகவே உருவான கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களை முன்னிறுத்தி உருவான கட்சி அல்ல எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். நடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் டாக்டர்.ஹஸ்மியாவின் ஊடாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை ஆகிய இடங்களில் கடந்த சனிக்கிழமை…

Read More

மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்: மேர்வின் சில்வா

வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அனைத்து மக்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலர்களை நோகடிக்காது தேன் எடுப்பதனைப் போன்று மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும். நாட்டின் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்படும் தொகையை விடவும் அதிகளவு…

Read More

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 ம் திகித நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதே. வெளிநாட்டு முதலீடுகள், வரி வருமானங்கள் மூலம் முறையான நிர்வாகத்தைச் செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசின் முக்கிய குறிக்கோள். திறந்த…

Read More