Headlines

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …

வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற…

Read More

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? – தெரிந்துகொள்வோம்

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன காரணம்? உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர்…

Read More

VIDEO- மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள் கிடைப்பது பிராந்தியத்துக்கான வரப்பிரசாதமாகும் – தாஹிர் MP!

மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து, அம்பாறை, நிந்தவூரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மாகாண சபையானது, மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்காக…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தோப்பூரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெசீலா, வட்டாரக் குழுத் தலைவர்களான நிஷ்மி, முஜாஹித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் நெறிப்படுத்தலில், தோப்பூர் பிரதேசத்துக்கான…

Read More

பிஞ்சுக்குழந்தையின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய தந்தையைப் பிடிக்க உதவிய சமூக வலைதளம்

பலரது நேரத்தை வீணாக்கி, அவர்களை அடிமைப்படுத்துவதாய் சொல்லப்படும் அதே சமூக வலைதளங்கள்தான் இன்று பல மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. கடந்த வாரம், சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஆவேசத்தின் உச்சகட்டத்துக்கே சென்று அந்த வீடியோவை தங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து அதில் உள்ள கொடூரனை யார் என்று அடையாளம் தெரிந்தால் சொல்லும்படி தங்கள் நண்பர்களிடன் உதவி கேட்டு, அவனை…

Read More

நீராவிப்பிட்டி மக்களுக்கான மின்னிணைப்பு வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற செயலணியூடாக மின்சார இணைப்புப் பத்திரத்தை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் ரிபாய், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறிய கைத்தொழில் திட்டமிடல் ஆலோசகர் மொஹிடீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.      

Read More

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்குமா?: ஆதாரம் இல்லை என தகவல்

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் மீன்எண்ணெய்…

Read More

“தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர், தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள்!

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை…

Read More

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது…

Read More

நீண்டநாள் கொள்ளையர்கள் அகப்பட்டனர்

ஆனமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் இராணுவத்திலிருந்து தப்பி வந்து மறைந்திருக்கும் 26 வயது இளைஞனையும் கைது செய்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் எனவும், கடந்த பல வருடங்களாக மிகத் தந்திரமான முறையில் இவ்விருவரும் ஆனமடு, புத்தளம், கல்கமுவ, நிக்கவெரட்டி, வாரியபொல போன்ற பிரதேசங்களில் வீடுகள்…

Read More

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த மகாகும்பா விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More