Headlines

மஹிந்தவின் இரண்டாவது மகனுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளது. கடற்படை அதிகாரியாக இருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய…

Read More

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக  ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்”  கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகளை ,  ‘ஐ.எஸ் ஐ.எஸ்’ பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற்செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பை தளமாக கொண்டு இயங்கும்  மனிதாபிமான நிவாரண அமைப்பினர்  (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு  வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துக்கொண்டு உரையாற்றினார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் இன்று காலை (27) இடம்பெற்ற இந்த நிகழ்வு அதன் ஸ்த்தாபக…

Read More

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் T-Shirt

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது. இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டி சர்ட்டில்’…

Read More

நல்லாட்சிக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!

அரச வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் வைத்தியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை வழங்காமை உள்ளிட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கான நுழைவாயில் மற்றும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான நுழைவாயில் அமைப்பதற்கு நிதியுதவி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்   நிதியொதுக்கீட்டில், பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரிக்கும் அதேபோன்று, பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் புதிய நுழைவாயில் ( GATEWAY) அமைக்கப்படவுள்ளது. அண்மையில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய உடனடியாக நிதியொதுக்கிய நிலையில், தயாரிக்கப்பட்ட நுழைவாயில் அமைப்பு மாதிரிகள் (Model), இன்று காலை (30) கலந்தாலோசித்து, உறுதி செய்து, வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பப்பட்டது. இதன்போது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அப்துல் அன்சார் ஆசிரியர் உள்ளிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாலமுனை சிவில் அமைப்புக்களின்…

Read More

பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர் தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும். தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு…

Read More

வர்த்தகர் ஷியாம் வழக்கின் தீர்ப்பு இன்று

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2013 மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முத்தலீப். கம்மத…

Read More

அடாவடித்தனத்தின் மூலம் எதையும் பெற முடியாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காட்டம்

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும் கூறினார். வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.   வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,…

Read More

முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இன்று (19) திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின்போது இச் சந்­திப்­புக்­கான திகதி தீர்­மா­னிக்­கப்­ப­டு­மென்றும் அவர் தெரி­வித்தார். இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­பல சேனாவின் போக்கு உட்­பட முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து இச்­சந்­திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)

Read More

ISIS இயக்கத்தில் 100 அமெரிக்க இளைஞர்கள் – பென்டகன் உறுதி

ஐஎஸ் இயக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் உள்ளனர் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. சிரியா, இராக் ஆகிய நாடுகளை இணைந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய நாடு அமைக்கப்போவதாக கூறி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆயதப் போராட்டத்தில் ஐஎஸ் வாதிகள் குதித்துள்ளனர். இவர்கள் சிரியா மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்தியாவில் இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் சென்று இந்த…

Read More

நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கள் இலத்திரனியல் முறையில்

நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப்…

Read More

முஸ்லிம் தலைமைகளின் இருப்புக்கான ஜனநாயகச் சமர்!!!

முஸ்லிம் சமூகத்தில் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமென்ற ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸையும், மக்கள் காங்கிரஸையும் நேரிடை, எதிரிடை மோதல்கள், முறுகல்களுக்கு தயார்படுத்தியுள்ளன. இதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பக்கத் துணையாகப் பல கட்சிகளும், உள்ளூர்த் தலைவர்களும் துணையாக நிற்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தேசிய ரீதியில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர் சிலர். எனினும் சிங்களத் தேசியமும், தமிழ்ப் பெரும்பான்மையுமே மக்கள் காங்கிரஸின் அரசியல் போக்கையும், நோக்கையும் சந்தேகிக்கின்றனர். ஆனால் மக்கள்…

Read More