Headlines

கனடா -இலங்கை வர்த்தக உறவுகள் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் – கனடா உயர் ஸ்தானிகர்

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ‘கனடாவுக்கான ஏற்றுமதி’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அமர்வொன்றின் போதே இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை கனடா-இலங்கை இடையேயான இருதரப்பு வர்த்தக கடந்த சில ஆண்டுகளாக…

Read More

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் பூர்த்தி

பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார். இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

அரபு நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதம் இல்லாத மண்டலம் உருவாக்கப்படவேண்டும் என்று உலக நாடுகள் முயற்சித்துவருகின்றன. இஸ்ரேலில் செயல்பட்டுவரும் யூத அரசு பெருமளவில் அணு சக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கருதப்படும்போது இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்த அந்த நாடு மறுத்துவருகின்றது.  சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.நா அணுசக்தி வருடாந்திர மாநாட்டில் இஸ்ரேலின் அணு ஆயுதக் குவிப்பு பற்றிய ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியில்…

Read More

ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து பதற்றமில்லை : ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர், ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டு மற்றம்…

Read More

இலங்கையில் போலியோவை ஒழிக்க முடிந்தது எவ்வாறு? பிரதமர் உரை

இலங்கையில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை எனவும், இரண்டு தசாப்தங்களாகவே நாட்டில் போலியோ நோயாளிகள் பதிவாகவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் நாட்டில் போலியோவை ஒழிக்க முடிந்துள்ளதாகவும், இதற்கு ரொடரி அமைப்பின் உதவியே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 107வது ரொடரி இன்டநெசனல் மாநாட்டில் (Rotary International Convention) கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறியதாவது, 1995ம் ஆண்டு…

Read More

இன்று மட்டுமே மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று மாலை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ்வாறு தொடங்குமாயின், இன்றைய தினம் (16) மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Read More

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம் காசிம் – வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ” மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின் போதே…

Read More

கெசினோவுக்கு விரைவில் தடை!

கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கெசினோ சூது விளையாட்டுக்களில் வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கெசினோ காரணமாக இலங்கையில் பாரிய கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளமையை பல்வேறு மதக்குருமாரும் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

டெங்குவை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்!

நாடு முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபால தெரிவித்தார். நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

Read More

கர்த்தினால் மல்கம் ரங்சித் பேராயர் அவர்ளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி வேண்டுகோள்.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயர் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்.அதற்கான செயற்பாடுகளில் இன்றிலிருந்து நான் இறங்கப்போகின்றேன். என்று கிராமிய பொருளாதார விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட அந்தக்கொடூரமான சம்பவங்களின் பின்னர் இந்த நாட்டிலே மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.அந்த நெருக்கடியான சூழலிலும் தனது மக்களின் பாரிய உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காருங்கள் என்று…

Read More

மஹிந்தவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு எனக்கு தொலைபேசி அழைப்­பு வருது

கிழக்கில் வலு­வான முஸ்லிம் சக்தி உரு­வெ­டுத்து வரு­வ­தாக தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு தினமும் தொலைபேசி அழைப்­புகள் வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் சிறு வியா­பா­ரி­களின் வர்த்­தக நிலை­யங்­களை அகற்றும் திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பொர­ளையில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் பாரா­ளு­மன்ற…

Read More

மின்னலும் பின்னலும்

கடந்த 18.09.2016 ஆம் திகதி மாலை சக்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட “மின்னல்” நிகழ்ச்சியில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கலந்து கொண்டார். வழமையாக தமிழ்மொழியில்  நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்களத்தில் நடைபெற்றதோடு, ஒரு பௌத்த பிக்குவை மாத்திரம் வைத்து நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். “மஹிந்த அரசாங்கத்தில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்தபோதிலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு தவறிவிட்டனர்” இது பற்றி உங்கள் கருத்து என்னவென்று நிகழ்ச்சி தொகுப்பாளரான ஸ்ரீ.ரங்கா  அவர்களால் கேட்கப்பட்டது.  இக்கேள்விக்கான பதிலை தரக்கூடியவர் வடபுல…

Read More