மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன – இந்தியா
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது….
