Headlines

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி கட்டிடத்துக்கு அருகில் தீ விபத்து. (படங்கள்)

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அண்மையில் திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மெஜஸ்டிக் சிட்டியிற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வர்த்தகக் கட்டடத் தொகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு……

ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலத்திலே உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசியக் கணக்காய்வு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமா? இல்லையா?…

Read More

ராம்குமார் தற்கொலை காட்சி கமெராவில் பதிவாகவில்லை: இது திட்டமிட்ட செயலா?

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அறையில் கண்காணிப்பு கமெரா உள்ளது. ஆனால், அது பழுதாகி இருப் பதால் தற்கொலை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்தக் கமெரா எப்படி பழுதானது? திட்டமிட்டே அது பழுதாக்கப்பட்டதா என்பன போன்ற பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் சிறைகளில்…

Read More

“யுத்தத்தால் பாதிப்புற்ற பிரதேசத்தை இன, மத பேதமின்றி கட்டியெழுப்ப முன் வாருங்கள்” – அமைச்சர் றிஷாத்

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியாவில் நேற்றுக் காலை (16) இடம்பெற்ற நவீன பேரூந்து நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாக பங்கேற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாட்டுடன் பிரதிப்போக்குவரத்து அமைச்சர்…

Read More

முஸ்லிம்களின் வயிற்றில் பாலைவார்த்துவிட்டு புளியைக் கரைக்கும் நல்லாட்சி!

வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரசாங்க எம்பிக்கள், ஜம்இய்யதுல் உலமா, சிவில் சமூகம், மற்றும் பாதிக்கப்பட்டோர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு. அமைச்சர் ஹலீம் முஸ்லிம் சமூகம் இன்று அமைதியிழந்கு தவிக்கின்றது. நெருக்கடியான, மிகவும் மோசமான சோதனை மிகுந்த காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். நமது சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் வௌ;வேறு வடிவங்களில்…

Read More

கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது…

Read More

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன. பரம்­பரை ரீதி­யான பாதிப்­புக் ­கா­ர­ண­மாக இவ்­வாறு மாறு­பட்ட தோற்­ றத்தில் பிறந்த மேற்­படி மாடு, இறைச்சி வெட்டும் நிலை­ய­மொன்­றுக்கு விற்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கடும்போக்குவாதிகளால் நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடும்

தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் வென்றெடுக்கப்பட்டுள்ளது.  போர் வெற்றியின் கௌரவத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வழங்குவதனைப் போன்றே நாம் வருந்துகின்றோம். ஏனெனில் போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சமாதானம் நாட்டில் நிலைநாட்டப்படவில்லை. இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடு என்ற ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதனை…

Read More

அமைச்சர்களில் அதிஷ்டம் வாய்ந்த அமைச்சராக றிஷாட் பதியுதீன் திகழ்கிறார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புகழாரம் !!!

அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அவர் வகித்த அமைச்சு பதவிக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன்மாதிரியே. இதேவேளை தற்போதைய அமைச்சரவையில் மிகவும் அதிர்ஷ்டமான அமைச்சர்…

Read More

‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான திட்டங்கள் தீட்டியவர். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி…

Read More

2050-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியை எட்டும்

உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டிவிடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த சமயத்தில ஆசிய நாடுகளின் மக்கள்…

Read More

துமிந்த சில்வா பெண் ஒருவரை தாக்கினார்! நீதிமன்றத்தில் விசேட அதிரடிப்படைவீரர் சாட்சியம்

தேர்தல் தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு வந்து அங்கு வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவரை தாக்கினார் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பமாகின. இதன்போது விசேட அதிரடிப்படையை சேர்ந்த தமித் சுரங்க என்பவர் சாட்சியமளித்தார். இவரே பாரத லக்ஸ்மன் உட்பட்ட நான்குபேர், கொலை தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாவார். இந்தநிலையில் நேற்று அவர்…

Read More