விலைக் குறைப்பு செய்யாத வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்
அரசாங்கம் மக்களுக்கு அறிவித்த பொருட்களுக்கான விலைக் குறைப்பு நுகர்வோர்களை சென்றடைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் உள்ள நுகரவோர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான அலுவலகம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன்,நுகர்வோர் அதிகார…
