Headlines

விருதோடை வட்டார வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில், விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ.எம்.ஆசிக் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். வேட்பாளர் ஆசிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கட்பிட்டி பிரதேச சபை அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, தொழிலதிபர் நயீம் மற்றும் பலர்…

Read More

நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் அமீர் அலி தலைமையில்..

கல்குடாத் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகத்தின் மூலம் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் முஸ்லிம் சமூகம் நன்மைபெறப்போகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி புதிதாக நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று (14.01.2019) திங்கள்கிழமை மாலை வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலயத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு நீர்ப்பாசன…

Read More

குமார் குணரத்தனம் கைது

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.

Read More

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!

முஹம்மது மசூத் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன். பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன்.  இப்போது நானும் ஒரு முஸ்லிம்.    சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய  அல்லாஹ்விற்கே   எல்லா புகழும். கீல்லிங்க்டொன் என்ற தனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

Read More

விளையாட்டுத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை இன்று மன்னார் நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கி வவைக்கப்பட்டது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் , விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமயிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறித்த உதவித் தொகை மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் 170 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

– சுஐப் எம்.காசிம் –  முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம்.  எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா குருமண்காட்டில் முல்லைத்தீவு மக்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர் கூறியதாவது, நான் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தபோதும், வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் வவுனியா, முல்லைத்தீவு மக்களுக்கும் பணிபுரிய கடமைப்பட்டவன். அந்த மாவட்ட மக்களுக்கும் நான்…

Read More

மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் எமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தம் தொடர்பில் உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி ஆழமாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் 100 நாட்களுக்குள் இதனை நடை முறைப்படுத்த அளுத்தம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் கூறினார். . அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த  துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக வெளியான செய்தி…

Read More

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

-சுஐப் எம்.காசிம்- நாட்டின் துறைசார் நிபுணர்களையும் பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்க்கும் தேசியப்பட்டியல் திட்டம் இன்று பலரையும் தொற்று நோய்க்குள்ளாக்கியுள்ளது. இப்பட்டியலுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எட்டாப்பொருத்தம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் இத்திட்டம் அமுலான 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஏழு தேர்தல்களில் (1989, 1994, 2000, 2002, 2004, 2010, 2015) இந்தத் தேசியப் பட்டியலுக்காக அதிகம் முண்டியடித்ததும், முரண்பட்டதும் முஸ்லிம் கட்சிகளே. முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தலில் (1989) கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலும் பல…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீன் கிரேண்பாஸ் பள்ளிவாசலுக்கு விஜயம்

கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது குறித்து இன்று பிரதமர் தி.மு.ஜயரத்னவையும் சந்தித்துள்ளார். அதே வேளை இன்று காலை மீண்டும் கிரேண்ட் பாஸ் பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு சேதத்துக்குள்ளானதை பார்வையிட்டுள்ளார் சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் வன்னியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக கொழும்பு திரும்பியதுடன்,கிரேண்ட் பாஸ் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வன்னியில் 3 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெறுவோம் – றிஷாத்  பதியுதீன்

எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில் நாம் புதிய அரசியல் காலாசாரத்தை தோற்றுவித்து செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் சில அரசியல் வாதிகள் அந்த கலாசாரத்தை அகற்ற முனகைின்றனர்.அது அவர்களது கனவு என்பதை சொல்லிக்கொள்ள…

Read More

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு

வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 02.02.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் பிரதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…

Read More

யாழில் கடந்த வாரம் 240 பேர் பொலிஸாரால் கைது

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 240 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Read More